• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் சிகிச்சை

June 2, 2020 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களுக்கு பிறகு நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மேலும் படிக்க