June 2, 2020
தண்டோரா குழு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களுக்கு பிறகு நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.