• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

June 2, 2020 தண்டோரா குழு

கொரோனா காலத்தில் பள்ளி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வற்புறுத்தி வருகிறது. பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக சொல்லி குழந்தைகளை அலைக்கரிக்கிறது. அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கும் உரிய சம்பளம் வழங்குவதில்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதனால் சிறு வயது பள்ளி குழந்தைகளுக்கும் மன அழுத்தமானது அதிகரிக்கிறது.

அதேசமயம் சம்பளம் வழங்காததால் ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

மேலும் படிக்க