June 1, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி தம்பதியினர்
எளிய முறையில் திருமணம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி.கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.இருவரும் பெங் களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு பெற்றோர் சம்மத த்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி இன்று காலை சூலூரை அடுத்துள்ள சோமனூர் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி பகுதியில் உறவினர்கள் 50 பேர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் திருமணம் நடைபெற்றது.இதில் பியூட்டி என்னவென்றால் தங்களது திருமணத்தை முன்னிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்கள் 450 பேருக்கு அரிசி,மளிகை சாமான்கள் வழங்கியது தான்.
இதுகுறித்து மணமகன் ரஞ்சித் கூறுகையில்,
ஆடம்பரமாக திருமணம் நடத்த நினைத்திருந்ததாகவும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும்,அதில் தனக்கு மன திருப்தியை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,இனி வரும் காலங்களில் ஆடம்பரமாக திருமணம் செய்வதை தவிர்த்து இது போன்ற ஏழை,எளிய மக்களுக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆடம்பரமாக திருமணம் செய்வதை தவிர்த்து எளிய முறையில் திருமணம் செய்தது மட்டுமல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஐடி ஜோடியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.