• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் புகார்

June 1, 2020 தண்டோரா குழு

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் akp சின்னராஜுக்கு மிரட்டல் விடுத்த சட் டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மேற்குமண்டல காவல்துறைதலைவர் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளா akp சின்னராஜ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் ஆதரவாளர்கள் 20 க்கும் மேற்பட்டோர் சின்னராஜ் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிகிறது. மேலும் இனி ஆய்வு என கூறிக்கொண்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குள் வந்தால் கொலை செய்து விடுவதாக akp சின்னராஜ்க்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மேற்குமண்டல காவல்துறை தலைவரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கட்சி அறிவிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாவோம் என்றும் மனு அளிக்க வந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க