• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் மர அறுவை இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

May 29, 2020 தண்டோரா குழு

சூலூரில் மர அறுவை இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.( வயது 35 ).சொந்தமாக மர அறுவை மில் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கல்பனா ( வயது 23 ).இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம் செய்துள்ளனர். கல்பனா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவனும்,மனைவியும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் பணியாற்றுவது வழக்கம்.இன்றும் வழக்கம் போல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தர்மராஜ் வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, கல்பனா மர அறுவை இயந்திரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார்.இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக கல்பனாவின் தலை மர இயந்திரத்தில் சிக்கி துண்டாகி சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கல்பனாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த கல்பனாவின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,இருவருக்கும் திருமணமாகி 1 1/2 வருடமே கடந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.மர அறுவை இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி 5 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க