• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நிவாரணம் வேண்டி எம்.ஜி.ஆர், கமல் வேடத்தில் வந்து மனு

May 28, 2020 தண்டோரா குழு

கோவையில் நிவாரண நிதியுதவி கோரி எம்.ஜி.ஆர்,கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கினால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேடை நடன தொழிலை நம்பியுள்ள கலைஞர்களுக்கு பிப்ரவரி முதல் ஜீன் மாதம் வரையிலான சீசன் வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வந்ததாகவும், கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாகவும் நடன கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமெனவும், அரசு சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க