• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டுகளை உடைத்த ஒற்றை யானை

May 28, 2020 தண்டோரா குழு

சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற ஒற்றை காட்டு யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும், வழக்கமாக ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தை கடந்து செல்லும்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றது. வெளியே ஊழியர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் அதே வளாகத்தில் நின்ற யானை பின் வனத்திற்குள் சென்றது.

மேலும் படிக்க