• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு ஆர்பாட்டம்

May 26, 2020 தண்டோரா குழு

கோவையில் இந்து முன்னணியினர் கோயில்கள் முன்பாக கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கு தொடர்கிறது. இதன் பொருட்டு ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. மேலும் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கோயில்கள் முன்பாக கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG-20200525-WA0097

இதன் ஒரு பகுதியாக கோவை கோனியம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியைச் சேர்ந்த குணா தலைமை வகித்தார். பத்துக்கும் மேற்பட்டோர் தோப்புக்கரணம் போட்டு அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவித்தனர் மேலும் முருகன் வேடமிட்ட சிறுவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க