• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தடையை மீறி செயல்பட்டு வந்த பிரபல ஜவுளி கடைகளுக்கு சீல் !

May 24, 2020 தண்டோரா குழு

கோவையில் தடையை மீறி செயல்பட்டு வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பெரிய ஜவுளி கடைகள் திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து கோவையில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து கள்ளத்தனமாக விற்பனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இன்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் திடீரென கோவை வடக்கு மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் தடையை மீறி மறைமுகமாக விற்பனை நடைபெற்று வந்த 10க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தார். ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி விற்பனை செய்து வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க