• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எல்லையை தாண்டி நீளும் தன்னார்வலர்களின் உதவிக்கரம்

May 20, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஊரடங்கினால் முடக்கப்பட்ட பழங்குடி மக்களின் பசியாற்ற சமுதாய சமையலறை ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது.

கெத்தைக்காடு,தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் ஒரு இருளர் பழங்குடியின கிராமம். இக்கிராமம் கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடர் வனத்திற்குள் அமைந்துள்ளது.இப்பகுதிக்கு கொரோனா அச்சத்தோடு,ஊரடங்கும் சேர்ந்து வந்தது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், மக்கள் வெளியே வர கெடுபிடிகள் செய்யப்பட்டதாலும் கிட்டத்தட்ட வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை உருவானது.
மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலையும், வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானம் இழந்து தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இது தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற பழங்குடி கிராங்களின் நிலையாகவும் இருந்தது. அப்போது பழங்குடி மக்களின் நிலை அறிந்து தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

முதலில் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை உள்ளிட்டவற்றை அம்மக்களுக்கு கொண்டு சேர்த்தனர்.இதைதொடர்ந்து பழங்குடிகளின் பசியை போக்கும் வகையில் சமுதாய சமையலறை என்ற திட்டத்தை செயல்படுத்தினர்.பூச்சமரத்தூர்,குரவன்காடு, சுரண்டி,கெத்தைக்காடு,வீரக்கல்,கோரைபதி, மானார் ஆகிய 7 பழங்குடி கிராமங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக,இந்த சமுதாய சமையலறை இயங்கி வருகிறது.

எழுத்தாளர் ஒடியன் லட்சுமணன்,ஷாஜகான் உள்ளிட்டோரின் முன்னேடுப்பில்,ஏராளமான தன்னார்வலர்களின் பொருள் மற்றும் நிதியுதவினால் தொடர்ந்து சமுதாய சமலயலறை இயங்கி வருகிறது. கிராமத்தில் உள்ள சிலர் இணைந்து சமையல் செய்து, பின்னர் ஊரில் உள்ள அனைவரும் இணைந்து சாப்பிடுகின்றனர்.ஊரடங்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்த போது பகலிலும் சமைத்து பரிமாறப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இரவு நேரம் அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு மட்டும் பகலிலும் உணவு சமைத்து தரப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை என உணவு செய்து தருவதாகவும் பழங்குடிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க