May 20, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து,மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,793 ஆக உயர்ந்துள்ளது.