• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பழங்குடி மாணவியின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் !

May 17, 2020 தண்டோரா குழு

கோவை பழங்குடி மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகேயுள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதை பற்றியும்,சங்கவி என்ற பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து,மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் உத்தரவின் பேரில், மதுக்கரை வருவாய் வட்டாட்சியர் சரண்யா மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழை வழங்கினார். ஏற்கனவே ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் மாணவி சங்கவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியதோடு, நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்பிற்கான செலவை ஏற்று கொள்வதாக உறுதியளித்தனர். இதேபோல அப்பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது. மற்ற மலசர் பழங்குடிகளுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதி உள்ளிட்டவை செய்து தர மாவட்ட நிர்வாகம் பணிகளை தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க