May 17, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் பத்தாயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவர் ஒன்றரை ஏக்கரில் சுமார் 1500 வாழைகள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் வாழைகள் சேதமடைந்தன.
மேலும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த கதலி 2500 வாழை மரங்களும்,
சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்த 1,200 வாழைகளும் சேதம் ஆகியுள்ளது.அதேபோல் புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த
வாழை மரங்களும் சேதமானது.
நேற்று பெய்த கனமழையால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு இருந்த வாழைகள் ஒரேநாளில் சேதமானது.இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.