• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடையுள்ள ‘டைகர் ஃபிஷ்’!

May 16, 2020 தண்டோரா குழு

கோவையில் 57 கிலோ எடையுள்ள ‘டைகர் ஃபிஷ்’விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் நடந்து வருகின்றது.

அந்த வகையில் மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.இந்நிலையில் இன்று கோவையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு ’டைகர் ஃபிஷ்’ எனப்படும் வகையைச் சேர்ந்த ஏற்றுமதி அதிகம் செய்யப்படும் மீன் விற்பனைக்கு வந்தது.

இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில்,

வழக்கமாக வஞ்சிரம், வாவால் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும். தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.இந்த மீன் கிலோ 1000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில்,இங்கு கிலோ வெறும் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

57 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

மேலும் படிக்க