கோவையில் 57 கிலோ எடையுள்ள ‘டைகர் ஃபிஷ்’விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் நடந்து வருகின்றது.
அந்த வகையில் மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.இந்நிலையில் இன்று கோவையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு ’டைகர் ஃபிஷ்’ எனப்படும் வகையைச் சேர்ந்த ஏற்றுமதி அதிகம் செய்யப்படும் மீன் விற்பனைக்கு வந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில்,
வழக்கமாக வஞ்சிரம், வாவால் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும். தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.இந்த மீன் கிலோ 1000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில்,இங்கு கிலோ வெறும் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
57 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு