• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரமலான் கிட்

May 12, 2020 தண்டோரா குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக்கிளை சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ‘ரமளான் கிட்’ வழங்கப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக்கிளை சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ‘ரமளான் கிட்’ மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கரும்புக்கடையிலுள்ள ஜமாஅத் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘ரமளான் கிட்’ மற்றும் முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர் அடங்கிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் பாரூக் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஜனாப். M.S. சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் M. அப்துல் ஹக்கீம், கிழக்கு மண்டலத் தலைவர் ஜனாப். அப்துல் ஜலீல், மத்திய மண்டலத் தலைவர் ஜனாப். அபுதாஹிர் மற்றும் நிறுவனங்களின் செயலாளர் ஜனாப். உம்மர் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் மூலம் சுமார் 90 துப்புரவுப் பணியாளர்கள் பயனடைந்தனர். நிகழ்வினை சமூக சேவைத்துறை செயலாளர் அப்துல் ஹக்கிம் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க