• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிமனித விலகலை பின்பற்றாமல் அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட தொழிலர்கள்

May 12, 2020 தண்டோரா குழு

கோவையில் இரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வட மாநில தொழிலாளர்களை தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

கோவையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு இரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இன்று மாலை கோவை இரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் கிளம்ப உள்ளது. இதற்காக சூலூர் பகுதியில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.வருவாய் துறை சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்துகளில் தனி மனித இடைவெளி இன்றி, தொழிலாளர்கள் நெருக்கமாக அமர வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அரசு துறை ஏற்பாடு செய்த பேருந்திலேயே தனி மனித இடைவெளி பின்பற்றாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க