• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ தாண்டியது!

May 10, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 669 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள்.இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 12,962 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் 2,32,368.
தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,959 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,195 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க