May 9, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில்,360 பேர் ஆண்கள்,166 பேர் பெண்கள்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,330ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கரோனா தொற்றால் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம்,இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,999 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 2,19,406. இன்றைய தேதியில் மொத்தம் 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.