• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டாஸ்மாக் கடைக்குள் ஓட்டைப் பிரித்து திருட முயன்ற நபர்

May 9, 2020 தண்டோரா குழு

கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் ஓட்டைப் பிரித்து திருட முயன்ற நபர் தப்பியோடினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.கடை திறந்தவுடன் மது பிரியர்கள் சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,தவறான முறையில் கடைகளை திறந்து பாட்டில்களை எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கோவை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மது பிரியர்கள் கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முடியாமல் சுவற்றின் மேல உள்ள ஓட்டை பிரித்து மது பாட்டில்களை திருட முயன்றனர். அக்கம் பக்கத்தினர் திருடனை பார்த்தவுடன் அங்கு தப்பித்து சென்றான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க