• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டாஸ்மாக்கை மூடுக ; பள்ளிவாசல்களில தொழுகை நடத்த அனுமதித்திடுக ஆட்சியரிடம் மனு

May 8, 2020 தண்டோரா குழு

கோவையில் பள்ளிவாசல்களில தொழுகை நடத்தவும், மதுபானக்கடைகளை மீண்டும் மூட உத்தரவிடக்கோரியும் செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினர்.

கொரானா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.ஆலயங்களை திறப்தற்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பினர்,கோவையில் உள்ள மசூதிகளை திறக்கவும்,வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் திறக்கப்பட் டுள்ள மதுபானக்கடைகளை திரும்பவும் மூட மறுபரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க