• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மது கிடைத்த சந்தோஷத்தில் ஸ்பெயின் நாட்டவர்கள்

May 7, 2020 தண்டோரா குழு

கோவை ஆவாரம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில், வரிசையில் முதல் நபராக நின்று மதுவாங்கிய ஸ்பெயின் நாட்டினர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.

இந்த நிலையில், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின்நாட்டைச்சேர்ந்த கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நின்று மதுவை வாங்கி சந்தோஷத்துடன் சென்றனர்.

மேலும் படிக்க