மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும். வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை திறந்துவைத்த மாநில அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்