May 6, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 324, அரியலூரில் 188, கடலூரில் 95, காஞ்சிபுரத்தில் 45, திருவள்ளூரில் 34, திருவண்ணாமலையில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1.88 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.இன்று மட்டும் 13,413 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 31 பேர் குணமடைந்துள்ளதால், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,516 ஆக அதிகரித்துள்ளது.