• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் 5 ஆயிரத்தை நெருங்குகிறது – இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

May 6, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 324, அரியலூரில் 188, கடலூரில் 95, காஞ்சிபுரத்தில் 45, திருவள்ளூரில் 34, திருவண்ணாமலையில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1.88 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.இன்று மட்டும் 13,413 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 31 பேர் குணமடைந்துள்ளதால், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க