• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்

May 6, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்படாத பகுதிகளுக்கு தளர்வு அறிவித்து அரசு தொழில்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கும் சில கட்டுபாடுகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது.இதற்கு பல கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக தமிழ் புலிகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்களது வீட்டின் முன்பு நின்ற போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் இன்று தமிழர் கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு நின்று டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியுடன் என்று முகக் கவசங்கள் அணிந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபடி முழக்கங்களை எழுப்பினர். ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து வேலையின்றி தவிக்கும் மக்கள் இருக்கையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு யோசனைகளை முதலில் எடுத்திருக்க வேண்டும் என்றும் தற்போது இந்த வைரஸ் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும் அதனை தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.

மேலும் படிக்க