• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்‌ – மாநகராட்சி ஆணையர்

May 5, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ முகக்கவசங்கள்‌ அணியாதவர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, பொதுமக்கள்‌ அனைவரும்‌ முகக்கவசங்களை தவறாமல்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌. பொது இடங்களில்‌ முகக்கவசங்களை கழற்றக்‌ கூடாது. மேலும்‌, முகக்கவசங்கள்‌ அணியாதவர்கள்‌ மற்றும்‌ முகக்கவசங்களை கழற்றி விட்டுச்‌ செல்பவர்கள்‌ மீது ரூ.100/- அபராதம்‌ விதிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இதனை தவறாமல்‌ அனைவரும்‌ பின்பற்றுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. இதனை மீறுபவர்கள்‌ மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என கூறியுள்ளார்.

மேலும் படிக்க