May 5, 2020
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்திரவு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.டெல்லி,ஆந்திர,கர்நாடக மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளன.இதற்கிடையில்,
தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனினும் தமிழக அரசு மதுக்கடைக்கு வருபவர்கள் முகம்கவசம் அணிய வேண்டும், தனி மனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன்
அறிவித்துள்ளார்.மேலும்,டாஸ்மாக் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் கையுறை அணிய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.