• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்று!

May 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும்,பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக
சென்னையில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,107ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,409 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்; இன்று ஒரே நாளில் 12,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு; கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க