April 28, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 121 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில்,80 பேர் ஆண்கள்,41 பெண்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி 2,058 ஆக உயர்ந்துள்ளது.இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 103 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று மட்டும் 27 குணமடைந்துள்ளனர்.இதைத்தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1128 ஆக உயர்ந்துள்ளது.