• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு முழுவதும் தமுமுக சார்பில் ரூ.3 கோடிக்கு மேல் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

April 28, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் 30 நாட்கள் ரூ.3 கோடிக்கு மேல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பாதிப்பால் நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு அமைப்பினர் உதவி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உணவு கசாயம் வழங்கப்பட்ட நபர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 591 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உணவு பொருட்கள் காய்கறி பருப்பு மளிகை பொருட்கள் 70 ஆயிரத்து 866 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் தற்போது வரை 3 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 592 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க