• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு

April 27, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்று 52 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா
பாதித்தோர் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியானது.இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 81 மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 809ஆக குறைந்தது.

இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:

மொத்த பாதிப்பு – 1,937
இன்று உறுதியானவர்கள் – 52
குணமடைந்தவர்கள் – 1,101
உயிரிழப்பு – 24
சிகிச்சை பெறுபவர்கள் – 809
மொத்த பரிசோதனைகள் – 94,781
இன்றைய பரிசோதனைகள் – 7,176
பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,312,
பெண்கள் – 625

மேலும் படிக்க