• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தாசில்தாரின் மனிதநேய செயல் !

April 27, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு
முதல்வர் பழனிச்சாமி முழு ஊரடங்கு உத்திரவிட்டார்.

கோவையில் இன்று முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டதால்மக்கள் யாரும் வெளியே வராததால் சாலைகள் வெறிசோடி காணப்பட்டன.இந்நிலையில்,பேரூர் சரக வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 4 மணியளவில்,தன் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பேரூர் காவல்துறை செக்போஸ்ட் முன்பு ஐம்பது வயது கொண்ட ஒரு பெண்மணியும் அவரது கணவரும் அங்கு நின்று அழுது கொண்டிருந்தனர்.அவர்களிடம் என்னவென்று விசாரித்தார் தாசில்தார்.

அப்போது,அந்த பெண்மணியின் தாயார் கோவை ராஜவீதியில் உள்ள வீட்டில் தற்போது இறந்துவிட்டார்.இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற எங்களை இங்குள்ள போலீசார் அனுமதித்து விட்டனர்.ஆனால் சிட்டிக்குள் இருக்கும் போலீசார் எங்களையும், இரு சக்கர வாகனத்தையும் அனுமதிக்க மறுப்பதாக சொல்லி அழுதனர்.இதைக் கேட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் தன் ஜீப்பில் அவர்கள் இருவரையும் ஏற்றி,ராஜவீதியில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு விட்டு வருமாறு தன் ஒட்டுநரிடம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.மேலும்,தனது வாகனம் வரும் வரை ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க