April 27, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு
முதல்வர் பழனிச்சாமி முழு ஊரடங்கு உத்திரவிட்டார்.
கோவையில் இன்று முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டதால்மக்கள் யாரும் வெளியே வராததால் சாலைகள் வெறிசோடி காணப்பட்டன.இந்நிலையில்,பேரூர் சரக வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 4 மணியளவில்,தன் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பேரூர் காவல்துறை செக்போஸ்ட் முன்பு ஐம்பது வயது கொண்ட ஒரு பெண்மணியும் அவரது கணவரும் அங்கு நின்று அழுது கொண்டிருந்தனர்.அவர்களிடம் என்னவென்று விசாரித்தார் தாசில்தார்.
அப்போது,அந்த பெண்மணியின் தாயார் கோவை ராஜவீதியில் உள்ள வீட்டில் தற்போது இறந்துவிட்டார்.இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற எங்களை இங்குள்ள போலீசார் அனுமதித்து விட்டனர்.ஆனால் சிட்டிக்குள் இருக்கும் போலீசார் எங்களையும், இரு சக்கர வாகனத்தையும் அனுமதிக்க மறுப்பதாக சொல்லி அழுதனர்.இதைக் கேட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் தன் ஜீப்பில் அவர்கள் இருவரையும் ஏற்றி,ராஜவீதியில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு விட்டு வருமாறு தன் ஒட்டுநரிடம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.மேலும்,தனது வாகனம் வரும் வரை ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தார்.