• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்

April 25, 2020 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்காக தனியாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து தொற்று நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் முரளி, நுரையீரல் சிறப்பு மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில்,

பி. எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக தனியாக மருத்துவமனை ஒதுக்கப்பட்டது. இதில் மார்ச் இறுதி மாதத்தில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 13 பேருக்கு கொரோனா
நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் ஐந்து நபர்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இதில் சர்க்கரை நோயாளியாக உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு நோயாளி மூச்சுத்திணறல் காரணமாக நினைவு இழந்தார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இந்த நோயாளி மிகுந்த கவனத்துடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவர் பூரண குணம் அடைந்தார்.பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சிகிச்சை பெறும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் மரணம் ஏற்படும் என்று பயப்பட வேண்டியதில்லை.மருத்துவர்களின் சரியான சிகிச்சை மூலம் கொரோனா நோய் தொற்றில்
இருந்து குணமடையலாம்.நோயின் தன்மையைப் பொறுத்து 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை சிகிச்சை பெற்று நோய்களில் குணமடைகின்றன. இவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் தரப்படுகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகத்தின் ஒத்துழைப்பு காரணமாக மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் செவிலியர் பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது என்றார்.

பேட்டியின் போது பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஐ.சி.யு மருத்துவ குழுவினர் வினோத், அருண், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க