• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு ரூபாய் இட்லி அம்மாவுக்கு உதவிய பாரதியார் பல்கலைக்கழகம்

April 25, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பாரதியார் பல்கலைக்கழகம்
உதவி புரிந்தது.

கோவை ஆலந்துரையை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். தனது சுயநலமில்லாத சேவையால் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.ஆம்! ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று ஒரு ரூபாய் இட்லி பாட்டி என சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.இவர் தற்போது ஊரடங்கு உத்தரவினால் வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து,பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ‌டாக்டர்.பி.காளிராஜின் வழிகாட்டுதலின்படி பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மற்றும் அலுவலர்கள் உணவு, மளிகை பொருட்களை ஏற்பாடு செய்து ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு மளிகை பொருட்களும் ரூபாய் ஐந்தாயரத்தையும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கா.முருகன் ஆட்சிக்குழு உறுப்பினர் ரூபா குணசீலன், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க