April 25, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பாரதியார் பல்கலைக்கழகம்
உதவி புரிந்தது.
கோவை ஆலந்துரையை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். தனது சுயநலமில்லாத சேவையால் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.ஆம்! ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று ஒரு ரூபாய் இட்லி பாட்டி என சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.இவர் தற்போது ஊரடங்கு உத்தரவினால் வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து,பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர்.பி.காளிராஜின் வழிகாட்டுதலின்படி பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மற்றும் அலுவலர்கள் உணவு, மளிகை பொருட்களை ஏற்பாடு செய்து ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு மளிகை பொருட்களும் ரூபாய் ஐந்தாயரத்தையும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கா.முருகன் ஆட்சிக்குழு உறுப்பினர் ரூபா குணசீலன், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உடனிருந்தனர்.