• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு 18 ஆக உயர்வு

April 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. அதில் தமிழகத்தில் இதுவரை 635 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 22,654 பேர் உள்ளதாகவும் மற்றும் அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சென்னையில் மட்டும் புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.அதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க