• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 23 நாட்களில் 13 ஆயிரம் பேர் கைது 13,146 வாகனங்கள் பறிமுதல் !

April 20, 2020 தண்டோரா குழு

144 தடை உத்தரவை மீறியதாக கோவையில் 23 நாட்களில் 13 ஆயிரம் பேர் கைது 13,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று 365 வழக்குகளில் 368 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் முகக் கவசம் அணியாமல் சென்றதாக 72 வாகனங்களில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 11 ஆயிரத்து 957 வழக்கு பதிவு செய்யப்பட்டு. 12999 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 13147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க