• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கணியூர் சுங்க வசூல் கட்டணம் இன்று முதல் துவங்கியது

April 20, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் உத்தரவு படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்க வசூல் கட்டணம் இன்று முதல் துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு,20 ந்தேதி முதல் சுங்க கட்டணம் துவங்கும் என அறிவித்திருந்தது.
ஊரடங்கு 3 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், பல்வேறு தொழிற்சாலைகள் சில கட்டுப்பாடுகளுடனும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்,கணிசமான போக்குவரத்து. ஏற்பட வாய்ப்புள்ளதால் சுங்க கட்டண வசூல் இன்று முதல் துவங்கியது.

அதன் படி இன்று கோவை கருமத்தம்பட்டி நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மத்திய அரசின் இந்த உத்தரவு பல்வேறு தலைவர்களிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க