• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா

April 18, 2020 தண்டோரா குழு

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. இதில், திருப்பூரில் அதிகமாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள், கொரோனாவால் தனிமைபடுத்தப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

ஏற்கனவே திருப்பூரில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 108 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,சென்னையில் 7 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், திண்டுக்கல்லில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், நெல்லையில் இருவருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், கோவையில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க