• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை

April 17, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்,குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் வீடுகள் மற்றும் தனிமைபடுத்த பட்டவர்களின் வீடுகளில் உள்ள குப்பைகளை,சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57,58,64 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு கவச உடையை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம் மற்றும் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மாநில குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர்.தொடர்ந்து அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் விக்டர் மற்றும் முதல்வர் மெர்சி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க