• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மன் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

April 17, 2020 தண்டோரா குழு

அம்மன் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,கக சாவடி மாகாளி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் சார்பில் 165 ஏழை முதியவர்ககள் மற்றும் நமது பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நேரில் வீடு தேடி வழங்கப்பட்டது. அதைப்போல் க.க.சாவடி பகுதி குடும்ப அட்டை இல்லாத 60 குடும்பங்களுக்கு இரண்டு கிலோ அரிசி, ஒரு வாரத்துக்கான காய்கறிகள் (10 வகை காய்கறிகள்) நேரில் வழங்கப்பட்டது.

மேலும் 210 நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கான காய்கறிகள் (10 வகை காய்கறிகள்) வீடு தேடி நேரில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் எஸ்.மோகன்குமார் Vao Retd, கே.சண்முகசுந்தரம், சி.அய்யாசாமி ஜெயிலர் ஓய்வு, வே.விஸ்வநாதன், எஸ்.ராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மன் டிரஸ்ட் உணவு வழங்க மதுக்கரை வட்டாட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். ஊரடங்கு முடியும் வரை உணவு, மாத்திரை தொடர்ந்து வழங்கப்படும் என அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க