• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வேகமாக தயாராகி வரும் வென்டிலேட்டர்கள்

April 16, 2020 தண்டோரா குழு

கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் விதமாக கோவையில் வேகமாக வென்டிலேட்டர்கள் தயாராகி வருகிறது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த சிகிச்சைக்கு வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்க பயன்படும் இந்த வென்டிலேட்டர் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹைடெக் இன்ஜினியரிங் எனும் சி.என்.சி மெசினரிஷ் சார்ந்த தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுரேஷ் என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு குறைந்த விலையில் வெண்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.அதிக விலைக்கு விற்பனையாகும் இந்த வென்டிலேட்டர் கருவியை தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யும் விதமாக தயாரித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்களுக்கு உதவும் வகையில் லாப நோக்கு இல்லாமல் இந்த வென்டிலேட்டர் தயாரிப்பு முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்து தங்களது சேவையை மக்களுக்கு கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்றும் கேட்டு கொண்ட அவர்,மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பேட்டரி மூலம் இயங்கும் வகையிலும் இந்த வென்டிலேட்டர்ரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க