• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளனர்..!

April 15, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் கொரோனா நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், வசதிகள் தயாராக உள்ளன. அந்தளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை, எனினும் தயாராக இருக்கிறோம்.தமிழகத்தில் 26 பரிசோதனை மையங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 5,320 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் விகிதம் 9.5%. இறப்பு விகிதம் 1.1% ஆகும் என்றார்.

மேலும் படிக்க