• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி பழங்குடியின மக்களுக்கு உதவிய தொண்டு அமைப்பினர்

April 15, 2020 தண்டோரா குழு

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி பழங்குடியின மக்களுக்கு உதவிய தொண்டு அமைப்பினர்.

கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி கிராமம் கிராமமாக சென்ற தொண்டு அமைப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பொது நல அறக்கட்டளை அமைப்பினர், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் தலைமையில் கொள்ளு, கோதுமை, எண்ணெய், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி சென்ற அவ்வமைப்பினர் கிராமம் கிராமமாக சென்று பொருட்களை வழங்கினர்.

அத்திக்கடவு, பில்லூர், சுரண்டி, தோண்டை, நீராடி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில் உள்ள 554 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தினக் கூலிகளாக பணியாற்றி வரும் அப்பகுதி மக்கள் வருமானம் இழந்துள்ளதோடு, நகரப்பகுதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வர முடியாத நிலை உள்ள நிலையில், இந்த உதவி அம்மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க