• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி பழங்குடியின மக்களுக்கு உதவிய தொண்டு அமைப்பினர்

April 15, 2020 தண்டோரா குழு

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி பழங்குடியின மக்களுக்கு உதவிய தொண்டு அமைப்பினர்.

கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி கிராமம் கிராமமாக சென்ற தொண்டு அமைப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பொது நல அறக்கட்டளை அமைப்பினர், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் தலைமையில் கொள்ளு, கோதுமை, எண்ணெய், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி சென்ற அவ்வமைப்பினர் கிராமம் கிராமமாக சென்று பொருட்களை வழங்கினர்.

அத்திக்கடவு, பில்லூர், சுரண்டி, தோண்டை, நீராடி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில் உள்ள 554 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தினக் கூலிகளாக பணியாற்றி வரும் அப்பகுதி மக்கள் வருமானம் இழந்துள்ளதோடு, நகரப்பகுதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வர முடியாத நிலை உள்ள நிலையில், இந்த உதவி அம்மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க