• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரானா தொற்று பாதிக்கப்பட்டோர் வீட்டைச்சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர் வைக்கும் பணி துவக்கம்

April 14, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டோர் வீட்டைச்சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர் வைக்கும் பணி துவங்கியது.

கொரானா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,கோவையில் கொரானா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கே கே புதூர்,ஆர்எஸ் புரம் துடியலூர், குனியமுத்தூர், போத்தனூர் உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு பகுதிகளாக அறிவித்துள்ளது.

தற்போது வைரஸ் தொற்று காரணமாக, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடுகளைச் சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக போத்தனூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி தடுப்பணை தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதேபோல், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற தடுப்பு அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இதேபோல் கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளதோடு, அவர்களது வீட்டிற்கு நண்பர்களோ உறவினர்களோ செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதிப்புள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க