• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முககவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

April 13, 2020 தண்டோரா குழு

முக கவசம் அணியாமல் மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். இன்று வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொது வெளியில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தும் சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தன்னார்வலர்கள் சமைத்த உணவுகளை நேரடியாக விநியோகிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளிலும், மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதித்து ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க