• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

April 13, 2020 தண்டோரா குழு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில்
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவர்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்தபோது கொரோனா நோய்த்தொற்று உறுதி என ரிசல்ட் வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது தனிமைபடுத்தப்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனிருந்த மற்ற மருத்துவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க