• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊரடங்கு உத்திரவை மீறுபவர்கள் வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட்

April 13, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர யாரும் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் அனாவசியமாக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் போலீசார் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவுகளும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,போலீசார் தற்போது அனாவசியமாக பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவர்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.இதனை தொடர்ந்து, இரண்டாவது முறை பயணித்தால் மீண்டும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.பின்னர் மூன்றாவது முறை தொடரும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

இதையடுத்து,இன்று கவுண்டம்பாளையம் அருகே போலீசார் அனாவசியமாக பயணிக்கும் பல வாகனங்களில் முதற்கட்டமாக மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க