April 12, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்றார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஏப்ரல் 1ஆம் தேதி 110பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 3 – 102பேர் அதன் பின்னர் அதிகபட்சமாக இன்று 106 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.