April 12, 2020
தண்டோரா குழு
கோவை ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையிக் பொறுத்தவரையில் நேற்று வரை கொரோனா தொற்றால் 97 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்,கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.மேலும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இவர்கள் கடந்த 24 ஆம் தேதி கோவை வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது நான்கு பேரையும் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஆர்.எஸ். புரம் பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை குடியிருந்த அபார்ட்மெண்ட்லும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கோவையில் கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.