• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடுமையாகும் ஊரடங்கு உத்தரவு….

April 12, 2020 தண்டோரா குழு

கோவை மாநகரின் உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் 30 நிமிடங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் கொரோனா தடுக்க ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.மேலும் வரும் நாட்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உள்ள நிலையில் தேவையின்றி சாலையில் வருவோரை போலீஸார் எச்சரித்து வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இன்று காலை முதல் உக்கடம், ஆத்துப்பாலம், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் காலை 9.00 லிருந்து 9.30 வரை மற்றும் 11.30 லிருந்து 12.00 வரை சாலைகள் முழுமையாக மூடப்பட்டு தடை மீறி வருவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.

அதைப்போல் மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் இதே போன்று தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க