• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஊரடங்கு குறித்து பிரதமரின் முடிவே தமிழக அரசின் முடிவு – தலைமை செயலாளர்

April 11, 2020 தண்டோரா குழு

பிரதமரின்முடிவை நடைமுறைப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.அதைப்போல்
காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும்
கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கை 2 வார காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். ஊரடங்கு விவகாரத்தில் ஒரு சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு செய்தால், அதன் மூலம் பலனளிக்காது. எனவே நாடு தழுவிய ஊரடங்காக அது இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மத்திய அரசின் முடிவே தமிழக அரசு முடிவு என்றார்.

தமிழகத்தில் இன்று 58 தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம்
கொரோனாவால் பாதிக்கப் பட்டோர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க