பிரதமரின்முடிவை நடைமுறைப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.அதைப்போல்
காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும்
கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கை 2 வார காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். ஊரடங்கு விவகாரத்தில் ஒரு சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு செய்தால், அதன் மூலம் பலனளிக்காது. எனவே நாடு தழுவிய ஊரடங்காக அது இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மத்திய அரசின் முடிவே தமிழக அரசு முடிவு என்றார்.
தமிழகத்தில் இன்று 58 தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம்
கொரோனாவால் பாதிக்கப் பட்டோர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு